தேர்தல் பணி - கவிதையாய்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2024

தேர்தல் பணி - கவிதையாய்...

 


மனதுக்குள் தேர்தல்

ஒத்திகை

இப்போதே

அடிக்கடி

நடக்கிறது..


மசங்கலாக

ஒரு பூத்

நினைவில்

வந்து போகிறது..


பாழடைந்து

போன

கழிவறை ஒன்று

கண் முன்னே

வந்து பயமுறுத்துகிறது..


தண்ணீர் வசதி

நினைத்தால்

கண்ணீர் 

வருகிறது..


மண்டல அலுவலர்

மண்டைக்குள்

மங்கலாக

யாரோ ஒருவர்

சட்டென 

நுழைகிறார்..


உடன்

பணியாற்றுபவர்

பற்றி

முன்பே தெரிந்துவிட்டதால்

சற்று நிம்மதி..


Mock pollல்

ஒரு பதற்றம்..

Seal வைப்பதில்

சின்ன சிக்கல்..

ஏஜென்டுகள் முன்னே

அந்த வியர்த்த முகத்தோடு

ஒரு முறை கண்ணாடியை

இப்போதே

பார்க்கிறேன்..


Bvc

Crc 

எல்லாம் 

அன்று

கடவுளாய் 

கைகொடுக்கும்..


17Aம்

Total buttonம்

ஒன்றாய் வர

குலதெய்வத்தை

கும்பிடுகிறேன்..


முந்நாள்

பூத்தில்

நன்கு

கவனிப்பதும்

முடிந்தபிறகு

தண்ணீர் கூட

இல்லாமல் தவிப்பதும்

தேர்தல் நடைமுறைகளில்

எழுதப்படாத விதிகளில்

ஒன்றாகும்..


வரிசையில்

வாக்காளர்கள்

நகர்வது

ஒரு நிழலாய்

உள்ளத்துக்குள்

ஓடுகிறது..


வாக்குப்பதிவு

முடிவில்

ஒரு பரபரப்பு..

சீல் இடுவதில்

ஏஜென்டுகளின்

சலசலப்பு..

காதில் கேட்கிறது..


Zonal வரும் வரை

வாசலில் கதவாய்

காத்திருந்து

கன்னிப்பெண்

போல

பாதுகாத்த 

BU ,CUஐ

அவர் வாங்கிக்கொண்டு...

கோணிப்பையில்

வாரி மற்றதை

போட்டுக் கொள்ளும்

காட்சியும்

நினைவில்

அரங்கேறுகிறது..


PO

17C

Metal seal

வாங்கிக் கொண்டு

பணத்தை 

பங்கிட

எண்ணுவதும்

கண் முன்னே

விரிகிறது..


Reserve ல்

வந்துவிட்டால்

இவை எதுவும்

தேவையில்லை என்று

செய்யும்

ஒத்திகையை

கொஞ்சம்

ஒத்தி வைப்பதும்

அடிக்கடி

நிகழ்கிறது..


நன்றி

திரு. ந.வீரா

திமிரி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி