TNPSC - பள்ளிக்கல்வி உட்பட 3 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2024

TNPSC - பள்ளிக்கல்வி உட்பட 3 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு.

 

பள்ளிக்கல்வி, அறநிலையம், கருவூலங்கள் ஆகிய 3 துறைகளின் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.


பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியில் 11 காலி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2023 நவம்பர் 21, 22-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வை 111 பேர் எழுதினர்.


இந்நிலையில், தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், அடுத்த கட்டமான நேர்காணலுக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலர் (கிரேடு-1) பணியில் 9 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 6, 7-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், நேர்காணலுக்கு 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கருவூலங்கள், கணக்கு பணிகளில் 52 காலி இடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி 5, 6-ம் தேதிகளில் தேர்வு நடைபெற்றது. இதில், கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மேற்கண்ட 3 தேர்வுகளில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி