பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு மதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: 2,328 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2024

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு மதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: 2,328 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்

 

பிளஸ் 2 தேர்வு முடிவில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரியவர்களில் 2,328 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் வந்துள்ளது.


இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் நகல் பெற 49,245 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். விடைத்தாள் நகல் பெறாமல் மறுகூட்டலுக்கு நேரடியாக 1,540 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 19 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுகூட்டலுக்கு 175 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 131 மாணவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் வந்துள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய 3,632 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 2,178 பேருக்கு மதிப் பெண்களில் மாற்றம் வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2,328 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் வந்துள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தலின் போது தவறிழைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி