பிடெக் பாடத்திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது சென்னை ஐஐடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2024

பிடெக் பாடத்திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது சென்னை ஐஐடி

மாணவர்களுக்கான பிடெக் பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி மீண்டும் உருவாக்கி உள்ளது.


இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), மாணவர்களுக்கு நவீன மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பாடத்திட்டத்தின் தேவை மற்றும் நெகிழ்வுத்தன்மை அடிப்படையில் இந்தியாவிற்கான பி.டெக் பாடத்திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்திட்டங்களிலிருந்து முன்கூட்டியே வெளியேறவும் அனுமதிக்கப்படுவார்கள்.


வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனம் ஒன்றின் பாடத்திட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பி.டெக் படிப்பின் இரண்டாம் ஆண்டிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெகிழ்வுத்தன்மை, இடைநிலைக் கற்றல் அதிகரிப்பு, செயல்திட்டங்கள், தொழில் முனைவோர் வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கும் வகையில் கல்வி அமைப்பை இக்கல்வி நிறுவனம் புதுப்பித்துள்ளது.


முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் அளித்த விரிவான கருத்துகளுக்குப் பின் பி.டெக் பாடநெறி காலஅளவு சீரமைக்கப்பட்டு, பட்டப்படிப்புக்கான கால அளவு 436 மணி நேரத்தில் இருந்து 400 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் தொழில் முனைவு சாத்தியக்கூறுகளை மாணவர்கள் ஆராய்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது.


ஐந்தாண்டு பி.டெக் மற்றும் எம்.டெக் பட்டங்களுடன், நானோ டெக்னாலஜி, தரவு அறிவியல், மின்சார வாகனங்கள் மற்றும் தொழில்துறைக்குத் தேவைப்படும் அதிநவீனக் களங்களில் இடைநிலைப் பட்டங்களையும் சென்னை ஐஐடி வழங்குகிறது. மாணவர்கள் இப்பட்டங்களுக்கான படிப்புகளை தங்களின் பி.டெக் பாடத்திட்டத்துடன் தடையின்றி தொடரலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி