அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2024

அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்

அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 தனியார் பள்ளிகளை போல ஆண்டு விழாக்களை நடத்துவது சாத்தியமற்றது எனவும் வரும் காலங்களில் பள்ளி ஆண்டு விழாவுக்கான நிதியை உயர்த்துவது குறித்து அரசே முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி