பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவித்தது தொடா்பான வழக்கில், பள்ளிக் கல்வி இயக்குநா், செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
தமிழக பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக கருதப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அறிவிப்பாணை வெளியிட்டாா். இதன் அடிப்படையில், சனிக்கிழமைதோறும் பள்ளிகளுக்கு மாணவா்களும், ஆசிரியா்களும் வருகை தருகின்றனா்.
பள்ளி வேலை நாள்களை அதிகரிப்பது, குறைப்பது, விடுமுறை நாளாக அறிவிப்பது ஆகியவை தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவாகும். இதன்படி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும். ஆனால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு நிகழ் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவிப்பாணை வெளியிட அதிகாரம் கிடையாது.
வாரத்தில் ஆறு நாள்களும் வேலை நாள்களாக இருப்பதால், ஆசிரியா்கள், குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனா். அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டம் 2009-இன்படி, மாணவா்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றனா். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தியுள்ளனா்.
இவா்களுக்கு பள்ளிக் கல்வியில் குறைந்த நாள்களே வேலை நாள்களாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பள்ளிக் கல்வி இயக்குநா் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவா் யாரையும் கலந்தாலோசிக்காமல், 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவித்து, தன்னிச்சையாக முடி
மற்ற பாட ஆசிரியர்கள் விட இடைநிலை ஆசிரியர்கள் ஒரு நாள் முழுவதும் அந்த குழந்தைகளை வைத்து பார்ப்பது மிகுந்த சிரமமானதாக உள்ளது நான் பார்த்த வகையில். ஆற்காட்டார் என்பது மிகவும் சிரமம்.
ReplyDeleteஇன்றைக்கு ஆசிரியர்களுக்கு கல்வி பணி தவிர்த்து காலை சத்துணவு முதல் ஒவ்வொரு குழந்தையின் உடல் நலம் கல்வித் திறன் பற்றிய சோதனை அவருடைய செயல்பாடுகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது போன்ற நிறைய சுமையை கொடுத்து ஆரம்ப பள்ளி மாணவர்கள் தங்கள் கற்கும் திறன் ஆசிரியர்களுடன் விரிவான முறையில் உரையாடுவதல்ன்மூலம் புரிந்து கொள்வது போன்றவை குறைந்து விட்டது. மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதாக நினைத்து கற்கும் நேரத்தை குறைத்து. மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கிறார்கள் பொது மக்களுக்கும் இதைப் பற்றி விரிவாக தெரியவில்லை.. முதல் மூன்று வகுப்புகள். தாய்மொழியாம் தமிழில் சரளமாக வாசிக்க, எழுத அடித்தளம் அமைப்பதாகும். எனவே ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு முழு நேரமும் கல்விப் பணியை மட்டுமே தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDelete