நாளை 11.01.2025 சனிக்கிழமை - பள்ளி வேலைநாள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2025

நாளை 11.01.2025 சனிக்கிழமை - பள்ளி வேலைநாள் அறிவிப்பு

 

கீழ்கண்ட மாவட்டங்களுக்கு நாளை 11.01.2025 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் ( தற்போதுவரை....)

கடலூர் 


கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் . பருவமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக நாளை 11.01.2025 ( சனிக்கிழமை ) அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால் , கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் நாளை ( 11.01.2025 ) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது .


இராணிப்பேட்டை ( ரத்து )

நாளை பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்படுகிறது உத்தரவு பின்னர் வரும் என தெரிவிக்கப்படுகிறது நாளை வேலை நாள் இல்லை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 11.01.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும் , எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் திங்கட்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி , பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

தூத்துக்குடி 

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் காரணமாக 14 : 12 : 2024 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடு செய்திடும் பொருட்டு 11.01.2025 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக அனைத்து வகைப் பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி