எஸ்சி, எஸ்டி மாணவர்கள் முழுநேர பிஎச்டி படிப்புக்கான ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முழுநேர முனைவர் படிப்பு (பிஎச்டி) பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டுக்கு (2024-2025) ஊக்கத்தொகை பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவ ஆதி திராவிட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாதிரி விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tn.gov.in/formdept_list.php என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை “ஆணையர், ஆதி திராவிடர் நல ஆணையரகம், எழிலகம், (இணைப்பு கட்டிடம்) சேப்பாக்கம், சென்னை 600 005” என்ற முகவரிக்கு பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முந்தைய கல்வி ஆண்டு விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த உதவித்தொகை திட்டம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி