TRUST - பிப்.8-ம் தேதி ஊரக திறனாய்வு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2025

TRUST - பிப்.8-ம் தேதி ஊரக திறனாய்வு தேர்வு

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் பிப்.3-ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வு தற்போது பிப்.8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.


அதன்படி நடப்பாண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு கடந்த டிச.14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வு எழுத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் மாநிலம் முழுவதும் டிசம்பர் 2-வது வாரம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் இத்தேர்வு பிப்.1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


இந்நிலையில் ஊரகத் திறனாய்வு தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து துறையின் இயக்குநர் என்.லதா வெளியிட்ட அறிவிப்பு:


தமிழகத்தில் சாரணர் இயக்குநரகத்தின் வைரவிழா திருச்சியில் ஜன.28 முதல் பிப்.3-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளதையொட்டி பிப்.1-ம் தேதி நடைபெறவிருந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வானது தள்ளிவைக்கப்படுகிறது. இந்த தேர்வு பிப்.8-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதுசார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி