சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், வயது, இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது.
முன்னாள் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர் என்பவர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
இது, தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. இதை தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான சான்றிதழ் சமர்ப்பிப்பில் மத்திய அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதன்படி, முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி