பி.எப்., உடன் ஆதாரை இணைக்க பிப்., 15 வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2025

பி.எப்., உடன் ஆதாரை இணைக்க பிப்., 15 வரை அவகாசம்

 

வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் நன்மைகளை பெற, பி.எப்., கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில், வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இ.எல்.ஐ., திட்டம் அறிவிக்கப் பட்டது. இத்திட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் நிறுவனம், பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.


இத்திட்டத்தின் நன்மைகளை பெற, யு.ஏ.என் எனப்படும் பிரத்யேக கணக்கு எண்ணுடன், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை இணைப்பது கட்டாயம். இதற்கான அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி