பள்ளிக்கல்வி துறையில் மாவட்டம் வாரியாக 31.05.2025 வரை ஓய்வு பெற்ற ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நாளது தேதி வரை தணிக்கை செய்யப்படாத அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் ,
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை அகத்தணிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது . 8 எனவே , 31.05,2025 வரை ஓய்வு பெறவுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் , அலுவலர்களின் விவரங்களையும் மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரங்களையும் இணைப்பில் கண்ட படிவங்களில் ( படிவம் -1,23 ) தனித்தனியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலருக்கு உடன் அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் பணிபுரிந்த காலங்களில் வரவு செலவு கணக்குகள் துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை coseauditsec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு - படிவம் -1
HM Retd details 31.05.2025 - Revised - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி