பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டு விழா : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2025

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டு விழா :

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிவிப்பு :


14 ஆண்டு தற்காலிக வேலையை, 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை கைவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் சொன்னபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த பட்ஜெட்டையொட்டி கோரிக்கை மனுக்களை தினமும் அனுப்பி வருகின்றனர்.

நீண்கால கோரிக்கையை இந்த பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்ப்போடு உள்ளோம்.

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 

3700 உடற்கல்வி,
3700 ஓவியம்,
2 ஆயிரம் கணினி அறிவியல்,
1700 தையல்,
300 இசை,
20 தோட்டக்கலை,
60 கட்டிடக்கலை,
200 வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களில் பணிபுரிகின்ற  பணியிடங்களை நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே 12 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும்.

பகுதிநேர ஆசிரியர்களின் கஷ்டங்கள் அனைத்தும் முதல்வருக்கு தெரியும். 

பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுத்தது, கடந்த 10 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைக்கு குரல் கொடுத்து நம்பிக்கை கொடுத்த முதல்வரை தான் மலை போல் நம்பி உள்ளோம்.

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முன்னேற்ற முதல்வரால் மட்டுமே முடியும்.

இந்த பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்து விட்டால் முதல்வருக்கு பாராட்டு விழாவை இந்த 12 ஆயிரம் குடும்பங்களும் எடுப்போம்.

--
எஸ்.செந்தில்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர் 
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 
செல் : 9487257203

3 comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே வேலை இல்லாமல் காத்து இருக்கிறோம்... எந்த தேர்வும் எழுதாமல் போர போக்கில் உப்புக்கு சப்பாக நியமனம் செய்த உங்களை எப்படி பணி நியமனம் செய்வது????

    ReplyDelete
  2. நடக்காது ராஐர நடக்காநது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி