இன்று (ஏப்.1) நடைபெறுவதாக இருந்த முதல் ஆண்டு பிஎட், மற்றும் 2-ம் ஆண்டு எம்எட் செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன், அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வுகள், கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி (இன்று செவ்வாய்க்கிழமை) நடைபெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் (பிஎட் முதல் ஆண்டு மற்றும் எம்எட் 2-ம் ஆண்டு) நிர்வாக காரணங்களால் ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகின்றன.
தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறும், மாற்று தேதியில் தேர்வுகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். ஏப்ரல் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி