02.06.2025 அன்று பள்ளிகள் திறப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2025

02.06.2025 அன்று பள்ளிகள் திறப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை...!

 

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 30.04.2025 எனவும் 01.05.2025 முதல் கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து , 2025-26ஆம் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் 02.06.2025 ( திங்கள் கிழமை ) என அறிவிக்கப்படுகிறது . அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 comment:

  1. வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. மாணவர்களின் நலன் கருதி தள்ளி வைக்கவும் ஜயா.தமிழக கல்விதுறை தகுந்த நடவைக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி