தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 30.04.2025 எனவும் 01.05.2025 முதல் கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து , 2025-26ஆம் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் 02.06.2025 ( திங்கள் கிழமை ) என அறிவிக்கப்படுகிறது . அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. மாணவர்களின் நலன் கருதி தள்ளி வைக்கவும் ஜயா.தமிழக கல்விதுறை தகுந்த நடவைக்கை எடுக்க வேண்டும்
ReplyDelete