JEE பிர​தான தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2025

JEE பிர​தான தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 2) நிறைவு பெறுகிறது.


நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.


இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இருகட்டமாக நடத்தப்படும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை நடப்பாண்டில் கான்பூர் ஐஐடி நடத்துகிறது.


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 2) நிறைவு பெறுகிறது. எனவே, தகுதியான மாணவர்கள் https://jeeadv.ac.in/ துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.


பிரதானத் தேர்வு இரு தாள்களாக காலை, மதியம் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி.களில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி