பள்ளிக் கல்வி- போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு - போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் - 2025-26 மாணவர்களுக்கான (9 முதல் 12ஆம் வகுப்பு) புத்தாக்க பயிற்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் ...
போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழப்புணர்வு வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன . அதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துவகை பள்ளிகளிலும் , 6 முதல் 12 வகுப்பு பயின்றுவரும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்தல் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட போதை எதிர்ப்பு மன்றங்கள் ( Anti - Drug Clubs ) அமைக்கப்பட்டுள்ளன . பார்வை ( 1 ) ல் காணும் அரசாணையில் போதை எதிர்ப்பு மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது . அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகளை 2025-26 ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்திய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Anti drug circular signed copy 03.06.2025.pdf
👇👇👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி