அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்கள் பணியை தொடர அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2025

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்கள் பணியை தொடர அனுமதி

 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட் -1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்காக 5,699 தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கவுர விரிவுரையாளர்கள் பணியை தொடர அனுமதி வழங்கியும், அதற்கான தொகுப்பூதியத்துக்கு ரூ.156 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) ஷிப்ட்-1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு 5,699 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை மாதம் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 11 மாதங்களுக்கு பணியாற்ற அனுமதியும் அதற்காக ரூ.156 கோடியே 52 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


உயர்கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில், "நடப்பு கல்வி ஆண்டில் 59 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட்-2 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள 1,661 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியை தொடர ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. No quality teaching for Rs 25000 each month for 10 or 11 months how students get quality education. Valka dravidam valarka dravidam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி