பகுதிநேர பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் டிப்ளமா படித்து விட்டு பணியில் இருப்பவர்கள் அதில் இருந்து கொண்டே பகுதி நேரமாக பிஇ படிப்பை படிக்கலாம்.
படிப்புக் காலம் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) பகுதி நேர பிஇ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று ( 16-ம் தேதி) தொடங்கியது.
பொறியியலில் டிப்ளமா முடித்தவர்கள் https://ptbe-tnea.com/regn.php என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி ஜூலை 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தரவரிசை ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி நடத்தப்படும். கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்தவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 31-ம் தேதி வழங்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி