அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு புதிய கல்வித் தகுதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2025

அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு புதிய கல்வித் தகுதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிடு

 

அரசு மேல்​நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு (கணினி பயிற்​றுநர்) புதிய கல்​வித் தகு​தியை நிர்​ண​யித்து பள்​ளிக்​கல்​வித் துறை அரசணை வெளி​யிட்​டுள்​ளது.


இது தொடர்​பாக பள்​ளிக்கல்​விதுறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேல்​நிலைக்​கல்​வி​யில் கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) பதவி​யும், முதுகலைப் பட்​ட​தாரி ஆசிரியர் பதவி​யும் ஒன்​று​போல் இருப்​ப​தால், கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) பதவி தமிழ்​நாடு மேல்​நிலைக்​கல்வி பணி சிறப்பு விதி​யுடன் இணைக்​கப்​படு​கிறது.


இப்​ப​தவிக்​கான கல்​வித்​தகுதி பி்ன்​வரு​மாறு நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கணினி பயிற்​றுநர் பதவிக்கு எம்​.எஸ்​சி. கம்ப்​யூட்​டர் சயின்ஸ் பட்​டப் படிப்​பும், பி.எட். பட்​ட​மும் பெற்​றிருக்க வேண்​டும். அல்​லது எம்​.எஸ்​சி. படிப்​புடன் ஒருங்​கிணைந்த பி.எஸ்​சி. பி.எட். அல்​லது பி.ஏ., பி.எட். பட்​டம் பெற்​றிருக்க வேண்​டும். மேலும், இளங்​கலை பட்​ட​மும், முதுகலை படிப்​பும் ஒரே பாடத்​தில் பெறப்​பட்​ட​தாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அந்த அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.


பழைய அரசாணை​யின்​படி, கம்ப்​யூட்​டர் சயின்​ஸ், கம்ப்​யூட்​டர் இன்​ஜினியரிங், இன்ஃபர்​மேஷன் டெக்​னாலஜி, சாஃப்ட்​வேர் டெக்​னாலஜி பாடங்​களில் எம்​.டெக். அல்​லது எம்​.இ. பட்​ட​மும், பி.எ.ட் பட்​ட​மும் பெற்​றவர்​களும் கணினி பயிற்​றுநர் பதவிக்​குத் தகு​தி​யானவர்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஆனால், தற்​போது வெளி​யிடப்​பட்ட புதிய அரசாணை​யின்​படி, எம்​.இ. எம்​.டெக்.பட்​ட​தா​ரி​கள் இந்​தப் பணிக்கு தகு​தி​யில்லை என்று கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி