பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 30,552 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2025

பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 30,552 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

 

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 30,552 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 2-வது சுற்று கலந்தாய்வு 26-ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.


அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதில் கட்-ஆப் மதிப்பெண் 200 முதல் 179 வரை பெற்ற 39.145 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதில் 36,731 பேர் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்த நிலையில், 17-ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதை அவர்கள் உறுதிப்படுத்த 18-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.


இந்நிலையில், தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய 30,552 பேருக்கு நேற்று காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்துக்கு சென்று, அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து கல்விக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். 23-ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிக்கு சென்று, சேர்க்கை நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் அறிவுறுத்தியுள்ளார்.


மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் கல்லூரியில் சேராவிட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த நிலையில் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.


தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, 2-வது சுற்று கலந்தாய்வு ஜூலை 26-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி