பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2025

பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

 

பள்​ளி, கல்​லூரி​களுக்கு அரசு பேருந்து சேவை வழங்​கு​வது தொடர்​பாக மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் ஆலோசனை செய்து வரு​கிறது.


இது தொடர்​பாக அத்துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் 27 பணிமனை​களில் இருந்து நாள்​தோறும் 3,233 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்​லாத அளவுக்கு கடுமை​யான நெரிசல் காணப்​படும்.


இவற்றை கருத்​தில் கொண்டு பெண் பயணி​கள் அதி​க​மாக பயணிக்​கும் வழித்​தடங்​களில் மகளிர் மட்​டும் பயணிக்​கும் வகை​யில் 50 சிறப்பு பேருந்​துகளை இயக்​கலாம் என்று ஆலோசித்து வரு​கிறோம்.


இதேபோல், மாணவ-​மாணவி​கள் பேருந்​துகளில் இருக்​கை​யில் அமர்ந்​த​படி பயணிப்​பதை உறுதி செய்​வதற்​காக அவர்​களுக்கு என தனி​யாக 50 (நடைகள்) சிறப்பு பேருந்துகளை இயக்​க​வும் திட்​ட​மிட்​டுள்ளோம்.


அதாவது, பள்​ளி, கல்​லூரி நேரங்​களில் குறிப்​பாக காலை மற்​றும் மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களுக்​குள் நேரடி​யாக சென்று பேருந்து சேவை​கள் அளிக்​கும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதி​லும் குறிப்​பாக மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களில் இருந்து பேருந்து சேவை​களை தொடங்​கு​வதற்​கும் உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது.


இதற்​காக சுமார் 25 கல்வி நிறு​வனங்​களை சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் தேர்வு செய்​துள்​ளது. இதில் சுமார் 4 கல்​லூரி​கள் அடங்​கு​வதோடு பெரும்​பாலான பள்​ளி​கள் பெண்​கள் மட்​டும் பயிலும் மேல்​நிலைப்​ பள்​ளி​களாகும். இந்த மகளிர் சிறப்பு பேருந்​துகள் இயக்​கு​வது குறித்​தும், பள்ளி மாணவ-​மாணவி​களுக்​கான சிறப்பு பேருந்து சேவை குறித்​தும் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்​பி​யுள்​ளோம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி