வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை - இணையவழி கலந்தாய்வு தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2025

வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை - இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கல்விப் பிரிவு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தொழிற்கல்விப் பிரிவு இடஒதுக்கீட்டுக்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது.


இது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் (வேளாண்மைப்பிரிவு) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது.


விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மறுமதிப்பீடு, மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி மாற்றம் அவற்றுக்கான சரிபார்ப்புப் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு நேரடி கலந்தாய்வு வரும் 14-ம் தேதி நடைபெறும்.


அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான இணையவழி கலந்தாய்வு இன்று (9-ம் தேதி) தொடங்கியது. இது வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். பொதுக்கல்விப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு இணையவழி கலந்தாய்வும் இன்று தொடங்கி, வரும் 15-ம் தேதி வரை நடைபெறும்.


சான்றிதழ் சரிபார்ப்புப் பணி: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று மாணவர் சேர்க்கையை உறுதி செய்த விண்ணப்பதாரர்களுக்கு முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 19-ம் தேதியும், 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 29-ம் தேதியும், 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் ஆகஸ்ட் 6-ம் தேதியும், 4-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதியும் நடைபெறும்.


பொதுக்கல்விப் பிரிவு, தொழிற்கல்விப் பிரிவு விண்ணப்பதாரர்களில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்தவர்களுக்கு வரும் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 2-ம் கட்டமாகவும், ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3-ம் கட்டமாகவும், ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4-ம் கட்டமாகவும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும்.


துணைத் தேர்வின் மூலம் தேர்வானவர்களுக்கு இணையதள விண்ணப்பம் மற்றும் துணைக் கலந்தாய்வுக்கான தேதி, துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும். வரும் செப்டம்பர் 3-ம் தேதி கல்லூரி திறப்பு மற்றும் அறிமுக நாள் ஆகும். வரும் செப்டம்பர் 8-ம் தேதி உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி