School Morning Prayer Activities - 29.07.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2025

School Morning Prayer Activities - 29.07.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2025

திருக்குறள் 

குறள் 165: 


அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் 

வழுக்கியுங் கேடீன் பது. 


விளக்க உரை: 


பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.


பழமொழி :

Don't put off until tomorrow, what you can do today. 


இன்று செய்யக்கூடியதை நாளைக்கு தள்ளி வைக்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.


2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.


பொன்மொழி :


ஒழுக்கத்தின் பெருமையை குறைப்பதை தவிர, பொறாமைக்கு வேறு தன்மை கிடையாது - லிவி


பொது அறிவு : 


01.சுதந்திர இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?


Dr.ராஜ்குமாரி அம்ரித் கவுர் .

Dr.Rajkumari Amrit Kaur 


02. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியர் யார்?


தாதாபாய் நௌரோஜி

Dadhabai Naoroji


English words :


frantic – extremely frightened, doing things in hurry. அச்சம் கொண்ட, படபடப்புடன் செயலாற்றுகிற


Grammar Tips: 


 They bought potatoes. They bought meat.


They bought both potatoes and meat


We should use both... and 

When we need both things together


அறிவியல் களஞ்சியம் :


 எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.


ஜூலை 29

பன்னாட்டுப் புலி நாள்


பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.


நீதிக்கதை

 கிணற்றில் விழுந்த நரி


ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே... மே...ன்னு கத்திக்கொண்டே வந்தது. 


உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே... தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே... சே... நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. 


உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.


இன்றைய செய்திகள் - 29.07.2025


⭐சென்னையில் மாணவர்கள், மகளிருக்கு சிறப்பு பஸ் சேவைகள்- போக்குவரத்துக் கழகம்  பரிசீலனை.


⭐ உதகையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


⭐பட்டினியில் உயிரிழக்கும் காசா மக்கள்.. 3 இடங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀பெண்கள் உலகக் கோப்பை செஸ்: சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்.


🏀ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.


Today's Headlines


⭐Transport Corporation of Chennai has considered special bus services for students and women.


⭐The continuous heavy rains in Ooty have affected the normal life of the People. 


⭐Israel announced a temporary ceasefire in 3 locations as the people in Gaza are dying of hunger.


 SPORTS NEWS 


🏀Women's World Cup Chess: Divya Deshmukh won the championship.


🏀 In the cricket series, India and Pakistan are in the Asia Cup Group A.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி