இந்த ஆண்டு முதல் பிஎட் சேர்க்கைக்கு புதிய வழியில் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2025

இந்த ஆண்டு முதல் பிஎட் சேர்க்கைக்கு புதிய வழியில் கலந்தாய்வு

இந்த ஆண்டு முதல்முறையாக பிஎட் சேர்க்கைக்கு இணைய வழியில் கலந்தாய்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்...

பி.எட். மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு இந்த ஆண்டு முதல்​முறை​யாக இணைய வழி​யில் நடத்​தப்​படு​கிறது.


இதுதொடர்​பாக உயர்​கல்​வித்துறை அமைச்​சர் கோவி. செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஆண்​டு​களில் பி.எட். மாணவர் சேர்க்​கைக்கான கலந்​தாய்வு நேரடி​யாக நடத்​தப்​பட்டு வந்​தது. இதனால், வெளியூர் மாணவர்​கள் சென்​னைக்கு வந்​துசெல்​லும் நிலை இருந்​தது.


இந்த நிலை​யில், வெளியூர் மாணவர்​களின் சிரமத்தை போக்​கும் வகை​யில், முதல்​வர் அறிவுறுத்​தலின்​படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்​கைக்​கான கலந்​தாய்வை இணைய வழி​யில் நடத்தமுடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதன்​படி, ஆகஸ்ட் 4-ம் தேதி (நேற்​று) முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழி​யில் கலந்​தாய்வு நடை​பெறும்.


பி.எட். படிப்​புக்கு விண்​ணப்​பித்த மாணவர்​கள் www.lwiase.ac.in என்ற இணை​யதளம் வாயி​லாக கலந்​தாய்​வில் பங்​கேற்​று, தங்​களுக்கு விருப்​ப​மான கல்​லூரியைதேர்வு செய்​ய​லாம். தமிழகத்​தில் உள்ள அரசு மற்​றும் அரசு உதவிபெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் 2,040 இடங்​கள் உள்​ளன. மொத்​தம் 3,545 பேர் கலந்​தாய்​வில்​ பங்​கேற்​கின்​றனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி