அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2025

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

 

பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:


தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்​ணிக்கை அடிப்​படை​யில் பணி​யாளர் நிர்​ண​யம் செய்​யப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நில​வரப்​படி பள்​ளி​களில் உள்ள மாணவர் எண்​ணிக்​கைக்​கேற்ப முது​நிலை ஆசிரியர் பணி இடங்​கள் நிர்​ண​யம் செய்​யப்பட வேண்​டும். அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.


அதன்​படி தமிழ் மற்​றும் ஆங்​கில பாட ஆசிரியர்​களுக்கு வாரத்​துக்கு 24 பாட​வேளை​களும், இதர பாட ஆசிரியர்​களுக்கு வாரத்​துக்கு 28 பாட​வேளை​களும் குறைந்​த​பட்​சம் வரு​மாறு பணி​யாளர் நிர்​ண​யம் செய்​யப்​படு​கிறது. 11, 12-ம் வகுப்​புக்கு 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்​தைப் பின்​பற்ற வேண்​டும். மேல்​நிலைப் பள்ளி அமைந்​துள்ள பகுதி மாநக​ராட்​சி, நகராட்​சி​யாக இருப்​பின் 30 மாணவர்​களும், ஊரகப் பகு​தி​யாக இருந்​தால் மாணவர் எண்​ணிக்கை 15 ஆகவும் குறைந்​த​பட்​சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.


ஒரு​முறை பணிநிர​வல் செய்த ஆசிரியர்​களை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு மீண்​டும் மாற்​றம் செய்​யக்​கூ​டாது. அதே​நேரம், பணிநிர​வல் நடவடிக்​கைக்கு உள்​ளான ஆசிரியர் இந்த ஆண்​டும் விருப்​பம் தெரி​வித்​தால் அவரை தற்​போதைய பணி​யாளர் நிர்​ண​யித்​தின்​போது உபரி​யாகக் காண்​பிக்​கலாம்.


இந்த வழி​முறை​களைப் பின்​பற்றி முது​நிலை ஆசிரியர்​களை பணி நிர்​ண​யம் செய்​து, அதன் விவரங்​களை இயக்​குநரகத்​துக்கு அனுப்பி வைக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுஉள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி