திருக்குறள்
குறள் 165:
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.
விளக்க உரை:
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
பழமொழி :
Knowledge shared is knowledge doubled.
பகிரப்பட்ட அறிவு இரட்டிப்பு அறிவாகும்
இரண்டொழுக்க பண்புகள் :
1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.
2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
தவறுகளை பார்க்காதே அதற்கான தீர்வுகளை கண்டு பிடி
ஹென்றி ஃபோர்ட்
பொது அறிவு :
01.முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடு தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருவாரூர்(Thiruvarur)
02. இந்தியாவில் முதல் விலங்குகளுக்கான மேம்பால வழித்தட திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
ரணதம்போர் புலிகள் காப்பகம்
Ranthambore Tiger Reserve.
English words :
recant - Publically renounce or withdraw one's faith, மற்றவர்களுக்கு முன் தனது மத நம்பிக்கையை மறுத்தல்
Grammar Tips:
Continuation of the silent letter
"e" at the end of a word:
The "e" is often silent and can affect the pronunciation of the vowel before it.
(e.g., "cake", "make", "hope").
"P" before "s" is silent. Psychology, pseudo.
அறிவியல் களஞ்சியம் :
குடற்காய்ச்சல் (Typhoid) தடுப்புச்சத்து நீரை (Vaccine), சர் அலமோர்த் ரைட் (Sir Almorth Wright) (1861-1947) என்ற பிரிட்டிஷ் அறிவியலார் நோய்களை உண்டாக்கும் நுண் உறுப்பமைதியுடைய உயிரான நோய் நுண்மங்களைத் தனிச்சிறப்பாக ஆய்ந்து, அந்த நச்சுக்காய்ச்சலை எதிர்த்துத் தடைக்காப்புச் (immunity) செய்யக் கண்டுபிடித்தார்.
ஆகஸ்ட் 07
இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்
இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.
இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
நீதிக்கதை
அன்பின் மதிப்பு
அக்பர் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்தப்படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே சென்றான். அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்து கொண்டார்.
அவன் மன்னனிடம், அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான்.
அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.
மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், அரசே, கெட்டுப்போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ, அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான்.
அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான்.
நீதி :
நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.
இன்றைய செய்திகள் - 07.08.2025
⭐தொழில் வளர்ச்சி பரவல் அதிகமுள்ள மாநிலமாகவும், வாகனம், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி அதிகமுள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
⭐முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை நீர்மட்டம்- 5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
⭐ தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த 424 காவல் நிலையங்களில் 280 காவல் நிலையங்களை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
⭐ உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள தரலியில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட நிலச்சரிவு & கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 சதுரங்கப் போட்டி ஆகஸ்ட் 7 இன்று முதல் தொடங்குகிறது.
🏀கிரிக்கெட்-இந்தியாவின் புதிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு பெரும் ஆதரவு கிடைக்கிறது
Today's Headlines
🌟Tamil Nadu is the highest state in terms of the spread of industry, and with the highest number of vehicles and electronics exports.
🌟Vaigai Dam, which reaches its full capacity with the resources. A flood alert has been given by collectors for 5 districts.
🌟 The Tamil Nadu government has improved the quality of 280 police stations, supervised by inspectors, out of the 424 police stations managed by the police assistant inspectors.
🌟A landslide caused by a cloudburst in Dharali in Uttarkashi district of Uttarakhand and flash floods in the Khir Ganga river have swept away homes and civilians.
🏀 Sports News
🏀 The 2025 Chess Tournament begins today on 7th August.
🏀Mohammed Siraj got great support as India's new fast bowler
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி