10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: தேர்​வுத் ​துறை உத்​தர​வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2025

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: தேர்​வுத் ​துறை உத்​தர​வு

 

பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு எழுதவுள்ள மாணவர்​களின் பெயர் பட்​டியலில் விவரங்​களை சரிசெய்ய வேண்​டுமென தேர்​வுத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.


இதுதொடர்​பாக தேர்​வுத்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு கல்​வி​யாண்​டுக்​கான (2025-26) பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்​வு, வரும் மார்ச் - ஏப்​ரல் மாதம் நடத்​தப்பட உள்​ளது. இந்த தேர்​வெழுத உள்ள மாணவர்​களின் பெயர்ப் பட்​டியல் தயாரிக்​கப்பட இருக்​கிறது. இதையடுத்து அனைத்​துப் பள்ளி தலைமை ஆசிரியர்​களும் எமிஸ் தளத்​தில் மாணவர்​களின் விவரங்​கள் சரி​யாக உள்​ளதா என்​பதை சரி​பார்க்க வேண்​டும்.


மாணவர்​களின் பெயர், பிறந்த தேதி, புகைப்​படம், பெற்​றோர் பெயர், முகவரி உள்​ளிட்ட விவரங்​களை சரி​பார்க்க வேண்​டும். அதில் திருத்​தங்​கள் இருந்​தால் அக்​டோபர்) 6 முதல் 23-ம் தேதி வரை அவற்றை மேற்​கொள்ள வேண்​டும். மாணவரின் பெயர், பிறப்​புச் சான்​றிதழில் உள்​ள​வாறே இருக்க வேண்​டும். அரசிதழில் பெயர் மாற்​றம் செய்​தவர்​களுக்கு மட்​டுமே அதன் நகலை பெற்று அதன் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​து​கொள்ள அனு​மதி வழங்​கப்​படு​கிறது.


பாஸ்​போர்ட் புகைப்படம்: சமீபத்​தில் எடுக்​கப்​பட்ட மாணவருடைய பாஸ்​போர்ட் அளவு புகைப்​படத்தை மட்​டுமே பதிவேற்​றம் செய்​ய​வேண்​டும். இதுத​விர, தேர்வு முடிவு​கள் மாணவர்​களின் பெற்​றோர் செல்​போன் எண்​ணுக்கு குறுஞ்​செய்​தி​யாக அனுப்​பப்​படும். அதனால் பதிவேற்​றம் செய்​யப்​படும் செல்​போன் எண் சரி​யாக இருப்​பதை உறுதி செய்​து​கொள்ள வேண்​டும். தேர்​வில் சலுகை பெற விரும்​பும் மாற்​றுத் திற​னாளி தேர்​வர்​கள் அதற்​குரிய ஆவணங்​களு​டன் இணைத்து பதிவேற்​றம் செய்ய வேண்​டும். அதன்​பின்​னர் சலுகை கோரி பெறப்​படும் விண்​ணப்​பங்​கள் கண்​டிப்​பாக பரிசீலிக்​கப்​பட​மாட்​டாது. மேலும், மதிப்​பெண் சான்​றிதழ் வழங்​கிய பின்​னர் திருத்​தங்​கள் கோரி தேர்​வுத்​துறைக்கு அனுப்​பக்​கூ​டாது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி