முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தேசிய அளவில் முன்னிலையில் உள்ள ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வில் (Common Admission Test-CAT) தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் நவம்பர் 30-ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்துகிறது. காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வு நடைபெறும்.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ல் தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலன்கருதி விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://iimcat.ac.in எனும் வலைதளத்தில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.1,300, மற்ற தேர்வர்கள் ரூ.2,600 செலுத்த வேண்டும். தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.தேர்வு முடிவுகள் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி