ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு: 3.80 லட்சம் பேர் விண்ணப்பம்; காலக்கெடு இன்று மாலை முடிவடைகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2025

ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு: 3.80 லட்சம் பேர் விண்ணப்பம்; காலக்கெடு இன்று மாலை முடிவடைகிறது

 

‘டெட்’ தேர்​வுக்கு இது​வரை 3 லட்​சத்து 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான காலக்​கெடு இன்று (புதன்) மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.


மத்​திய அரசு கொண்​டு​வந்த இலவச கட்​டாய கல்வி உரிமை சட்​டத்​தின்​படி ஒன்​றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கும் ஆசிரியர் தகு​தித்​தேர்வு (டெட்) தேர்ச்சி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி இடைநிலை ஆசிரியர்​கள் ‘டெட்’ தாள்-1 தேர்​விலும், பி.எட் முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ‘டெட்’ தாள்​-2-லும் தேர்ச்சி பெற வேண்​டும். 2025-ம் ஆண்​டுக்​கான ‘டெட்’ தேர்வு நவ.15 மற்​றும் 16-ம் தேதி நடை​பெற உள்​ளது.


இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவு ஆக.11-ம் தேதி தொடங்​கியது. விண்​ணப்​பிக்க கடைசி தேதி செப்​.8-ம் தேதி முடிவடைய இருந்த நிலை​யில், விண்​ணப்​ப​தா​ரர்​களின் வேண்​டு​கோளை ஏற்று கடைசி தேதியை ஆசிரியர் தேர்வு வாரி​யம் செப்​.10-ம் தேதி (இன்​று) மாலை 5 மணி வரை நீட்​டித்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை நில​வரப்​படி 3 லட்​சத்து 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் ‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பித்​திருப்​ப​தாக ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் உயர் அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார்.


‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க விரும்​பும் ஆசிரியர்​கள் டிஆர்பி இணை​யதளத்தை (www.trb.tn.gov.in) பயன்​படுத்தி இன்று மாலை 5 மணி வரை விண்​ணப்​பிக்​கலாம். தற்​போது இறுதி ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவர்​களும், பி.எட் 2-ம் ஆண்டு படிப்​பவர்​களும் ‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கலாம். தேர்​வில் தேர்ச்சி பெறும் பட்​சத்​தில் அவர்​கள் தங்​கள் படிப்பை முடித்த பிறகு ‘டெட்’ தேர்ச்சி சான்​றிதழை பெற்​றுக்​கொள்​ளலாம்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி