முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2025

முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை

 

உயர் நீதி​மன்ற அறி​வுரை​யின்​படி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வை தள்​ளிவைப்​பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யம் தீவிர​மாக ஆலோ​சனை செய்து வரு​கிறது. அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள 1,996 முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்பை ஆசிரியர் வாரி​யம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று வெளி​யிட்​டது. இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பங்​கள் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பெறப்​பட்​டன. முதலில் தேர்வு செப்​.28-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.


ஆனால், அதே நாளில் டிஎன்​பிஎஸ்சி குருப்-2 தேர்வு நடை​பெறு​வ​தால் தேர்வு தேதி அக். 12-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், இந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்​வில் கல்வி உளவியல் மற்​றும் பொது அறிவு பாடத்​திட்​டம் மாற்​றியமைக்​கப்​பட்​டிருப்​ப​தால் புதிய பாடத்​திட்​டத்​தின்​படி தேர்​வுக்கு தயா​ராக 3 வார கால அவகாசம் அளிக்க வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்​கில் தீர்ப்​பளித்த நீதிப​தி​கள், முதுகலை ஆசிரியர் தேர்வை தள்​ளிவைப்​பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யம் பரிசீலிக்​கலாம் என அறி​வுறுத்​தினர்.


இதைத்​தொடர்ந்​து, தேர்வை தள்​ளிவைக்க வேண்​டும் என்று தேர்​வர்​கள் சிலர் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸை சந்​தித்து கோரிக்கை விடுத்​தனர். இந்​தச் சூழலில் முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வர் எஸ்​.ஜெயந்தி தலை​மை​யில் நேற்று முன்​தினம் (திங்​கள்​கிழமை) டிபிஐ வளாகத்​தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கூட்​டரங்​கில் நடந்​தது.


அதில், தேர்வை திட்​ட​மிட்​டபடி நடத்​து​வதா அல்​லது உயர் நீதி​மன்​றத்​தின் அறி​வுரையை ஏற்று தேர்வு தேதியை தள்​ளிவைக்​கலாமா என​ விவா​திக்​கப்​பட்​டது. பள்​ளிக்​கல்வி அமைச்​சரும் தேர்வு தேதியை தள்​ளிவைக்​கலாம் என்று அறி​வுறுத்​தி​யுள்​ள​தாக தெரி​கிறது. எனவே, முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு தேதி தள்​ளிவைக்​கப்​படலாம்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

2 comments:

  1. தற்போது படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு சலிப்பு ஏற்படும். எனவே தள்ளி வைக்க வேண்டாம்.

    ReplyDelete
  2. முதலில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக TET வைக்க வேண்டும்.... குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு முட்டாள்கள் எல்லா ம் லட்சக்கணக்கில் பணத்தைகொடுத்து வேலை வாங்குறாங்க.... அவர்களுக்கு திகதி தேர்வு வைத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே PG TRB க்கு அனுமதி க்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி