பள்ளி வளாகங்களில் மழை முன்னெச்சரிக்கை: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2025

பள்ளி வளாகங்களில் மழை முன்னெச்சரிக்கை: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

 

பள்ளி வளாகங்​களில் மழைக்​கான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்’ என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் சென்​னை, திருச்​சி, அரியலூர், தஞ்​சாவூர், உட்பட பல்​வேறு மாவட்​டங்​களில்பரவலாக மழை பெய்து வரு​கிறது. வரும் நாட்​களி​லும் மழைநீடிக்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை மையம் கூறியுள்​ளது.


மேலும், மழைநீர் பாதிப்​பால் மதுரை, கோவை, சென்னை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் வைரஸ் காய்ச்​சல் பரவலும் அதி​கரித்​துள்​ளது. இதனால் பொது​மக்​கள் கவன​முடன் இருக்க சுகா​தா​ரத்​துறை எச்​சரித்​துள்​ளது. இதற்​கிடையே சில மாவட்​டங்​களில் உள்ள பள்ளி வளா கங்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறைக்கு புகார்​கள் வந்​தன. இதையடுத்து பள்ளி வளாகங்​களில் மழைக்​கான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை முறை​யாகப் பின்​பற்ற வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறிவுறுத்தியுள்​ளது.


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் வழங்​கப்​பட்​டுள்ள அறி​வுறுத்​தல்​கள் வரு​மாறு: பரு​வ​மழைக் காலங்​களில் கடைபிடிக்க வேண்​டிய வழி​காட்​டு​தல்​கள் ஏற்​கெனவே பள்​ளி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன.


அதன்​படி பள்​ளி​களில் மின் இணைப்​பு​களை சரி​பார்த்​தல், திறந்​தவெளி கிணறுகள், கழி​வுநீர் தொட்​டிகளை மூடு​தல் என மாணவர்​களின் பாது​காப்​புக்​கு உரிய அம்​சங்​களை முழு​மை​யாகப் பின்​பற்ற வேண்​டும். பள்ளி வளாகங்​களில் தண்​ணீர் தேங்​காமல் இருப்​பதை உறு​தி​செய்ய வேண்​டும்.


பரு​வ​கால மாற்​றங்​களால் மாணவர்​களுக்கு ஏற்​படும் நோய்​களில் இருந்து பாது​காத்​துக் கொள்​வதற்​கான அறி​வுரைகள் வழங்க வேண்​டும். காய்ச்​சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்​களை அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்று சிகிச்சை வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட வழி​காட்​டு​தல்​களை தலைமை ஆசிரியர்​கள் முழு​மை​யாகப் பின்​பற்றி செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி