School Morning Prayer Activities - 18.09.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2025

School Morning Prayer Activities - 18.09.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.2025

திருக்குறள் 

குறள் 463: 


ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை 

ஊக்கா ரறிவுடை யார். 


விளக்க உரை: 


பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.


பழமொழி :

The darkest night produces the brightest stars. 


மிக இருண்ட இரவை பிரகாசமான நட்சத்திரங்களை உருவாக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.


2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.


பொன்மொழி :


உயர்ந்த தவம்-பொறுமை. உயர்ந்த ஆயுதம்- மன்னிப்.பு உயர்ந்த மகிழ்ச்சி-திருப்தி . -குரு நானக்


பொது அறிவு : 


01."பிக் ஆப்பிள்" என்றழைக்கப்படும் அமெரிக்க நகரம் எது?


நியூயார்க் - Newyork City


02."திருமறைக்காடு" என்று அழைக்கப்படும் ஊர் எது?


வேதாரண்யம் -, நாகப்பட்டினம்

Vedaranyam -Nagapattinam


English words :


stand out – noticable, தனித்துவமாக தெரிதல். stick to – follow strictly ஒரு விதியை, ஒழுங்கை அல்லது ஒரு செயலைத் தவறாமல் பின்பற்றுவது.


Grammar Tips: 


 Common mistakes with cut

1. Cut your nails X

       Clip your nails ✓

2. Cut your hair X

       Trim your hair ✓

3. Cut the bread X

       Slice the bread ✓

 4. Cut the grass X

 Mow the grass ✓


அறிவியல் களஞ்சியம் :


 கண்ணீரைத் தோற்றுவிக்கும் சுரப்பி கண்ணீர் சுரப்பி (Lachymal gland) என அழைக்கப்படுகிறது. கண்ணீர் என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் லக்ரிமா (Lacryma) என்பதாகும். அச்சுரப்பி கிட்டத்தட்ட வாதுமைக் கொட்டை அளவு வடிவில் (Almond nut) கண்ணின் மேலே அமைந்துள்ளது. ஆறு அல்லது ஏழு நுண்ணிய நரம்புக் குழாய்களால் கண்விழியில் மேற்பரப்பில் அது திறந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் கண்மூடித் திறக்கும்போது (blink) கண்ணின் மேற்பரப்பு முழுமையும் பரப்பலாகிறது. மேல் கீழ் கண்ணிமைகள் சேருமிடத்தில் தேவைக்கு மேலான நீர் சேகரிக்கப்பட்டு கண்ணின் உள் மூலையில் இரண்டு வாய்க்கால் வழியே வந்து மூக்கின் அருகிலுள்ள கண்ணீர்ப் பைக்கு எடுத்து வரப்படுகிறது.


செப்டம்பர் 18


உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில்  நீருக்கான  நெருக்கடி மற்றும்  நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது.


நீதிக்கதை


 மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!



ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.


விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான். 


நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.


இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.


இன்றைய செய்திகள் -;18.09.2025


 தொடர்ந்து குண்டு மழை ஏமன் துறைமுக நகரம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்


டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.


 வாக்கு திருட்டு, வாக்கு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Yகுரேஷி வலியுறுத்தி உள்ளார்.


விளையாட்டுச் செய்திகள்


உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.


கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி.சிங், ஓஜா நியமனம்


News Today 


 Israeli airstrikes continue on Yemeni port city 


At least 15 people have been killed in a cloudburst that flattened the city of Dehradun.


 Former Chief Election Commissioner S.Y. Qureshi has urged the Election Commission of India to conduct a proper investigation into allegations of vote rigging and irregularities in voting machines.


 *SPORTS NEWS* 


The World Athletics Championships are underway in the Japanese capital Tokyo. India's Neeraj Chopra performed well in his first attempt in today's competition.


RB Singh, Ojha appointed as new selection committee members of the Cricket Board.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி