தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) 2024 ம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II A ( நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள் ) தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வித்துறையில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு 06.10.2025 ( திங்கள்கிழமை ) அன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணைய வழியாக ( google meet ) நடைபெறவுள்ளது.
எனவே . மேற்படி உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்கள் தங்களுடைய தெரிவு கடிதத்தில் ( Selection Letter ) குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 06.10.2025 அன்று காலை 10.00 மணியளவில் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது . மேற்காண் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பணிநாடுநர்கள் TNPSC Selection Letter மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் ஒரு நகலினை ( மேலொப்பம் Attested copy ) சரிபார்ப்புக்கு எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
நாள் : 03.10.2025 பள்ளிக் கல்வி இயக்குநர்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி