முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்: நவ.6-ம் தேதி முதல் மாநிலக் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2025

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்: நவ.6-ம் தேதி முதல் மாநிலக் கலந்தாய்வு

 

முது​நிலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான அகில இந்​திய கலந்​தாய்வு ஆன்​லைனில் தொடங்​கியது.


நாடு​முழு​வதும் உள்ள அரசு, தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​கள், நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகங்​கள், மத்​திய அரசின் கல்வி நிறு​வனங்​களில் மருத்​து​வப் பட்​டமேற்​படிப்​பு​களான எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளமோ படிப்​பு​களுக்​கான இடங்​கள்நீட் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​பட்டு வரு​கிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்​துவ அறி​வியல் தேர்​வு​கள் வாரி​யம் (என்​பிஇஎம்​எஸ்) நடத்​துகிறது.


தமிழகத்​தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு​முழு​வதும் 2.30 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட எம்​பிபிஎஸ் முடித்த மருத்​து​வர்​கள், நீட் தேர்வை கடந்த ஆக.3-ம் தேதி எழு​தினர். தேர்வு முடிவு​கள் ஆக.19-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. இந்​நிலை​யில், எம்டி எம்​எஸ், எம்​டிஎஸ் மற்​றும் டிப்​ளமோ 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான முதல் கலந்​தாய்வு ஆன்லைனில் தொடங்​கியது. அதன்​படி, https://mcc.nic.in/ என்ற இணை​யதளத்​தில் நவ.5-ம் தேதி நண்​பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்​டும். அன்​றைய தினம் பிற்​பகல் 3 மணி வரை கட்​டணம் செலுத்​தலாம். அக்​.28-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி நள்​ளிரவு 11.55 மணி வரை இடங்​களைத் தேர்வு செய்​ய​லாம். நவ.6, 7-ம் தேதி​களில் தரவரிசைப் பட்​டியல் அடிப்​படை​யில் கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, 8-ம்தேதி அதன் விவரம் வெளி​யிடப்படும்.


மேலும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்​குள் இடஒதுக்​கீடு பெற்ற கல்​லூரி​களில் சேர வேண்​டும். 16-ம் தேதி முதல்18-ம் தேதிக்​குள் மாணவர்​களின் விவ ரங்​களை கல்வி நிறு​வனங்​கள் சரி​பார்த்​துக் கொள்ள வேண்​டும். இரண்​டாம் சுற்றுக் கலந்​தாய்வு நவ.19-ம் தேதி​யும், 3-ம் சுற்றுக் கலந்​தாய்வு டிச.8-ம் தேதி​யும், இறு​தி​யாக காலி​யாக​வுள்ள இடங்​களை நிரப்​புவதற்​கான கலந்​தாய்வு டிச.30-ம் தேதி​யும் தொடங்​க​வுள்​ளது.


இதேபோல் தமிழகத்​தில் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்​குப் போக,மீத​முள்ள 50 சதவீத அரசு இடங்​கள், தனி​யார் கல்​லூரி​களின் மாநில அரசு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான கலந்​தாய்வை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்​துகிறது. எம்​டி,எம்​எஸ், டிப்​ளமோ மற்​றும் எம்டிஎஸ் படிப்​பு​களுக்​கான 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான மாநில கலந்​தாய்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​பது நவ.6-ல் தொடங்​குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி