950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2025

950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு

 

தமிழகம் முழு​வதும் 950 மையங்​களில் தமிழ் மொழி இலக்​கி​யத் திறனறி தேர்வு நேற்று நடை​பெற்​றது. பிளஸ் 1 மாணவர்​கள் 2.70 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர்.


பள்ளி மாணவர்​களிடம் தமிழ்​மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்த, திறனறி தேர்வை பள்​ளிக்​கல்வி இயக்​ககம் நடத்​துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்​கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள், எஞ்​சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள் மற்​றும் பிற தனி​யார் பள்ளி மாணவர்​கள் என அதிக மதிப்​பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். அவர்​களுக்கு 2 ஆண்​டுக்கு மாதம்​தோறும் ரூ.1,500 கல்வி உதவித்​தொகை வழங்​கப்​படும்.


இந்​நிலை​யில், நடப்பு கல்வி ஆண்​டுக்​கான தமிழ்​மொழி இலக்​கி​யத் திறனறி தேர்வு தமிழகம் முழு​வதும் 950 மையங்​களில் நேற்று காலை 10 முதல் மதி​யம் 12 மணி வரை நடை​பெற்​றது. 2.70 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். சென்​னை​யில் அசோக் நகர் அரசு பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி, திரு​வல்​லிக்​கேணி என்​கேடி. பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி, சாந்​தோம் மேல்​நிலைப் பள்​ளி, ஷெனாய் நகர் மாநக​ராட்சி மேல்​நிலைப் பள்ளி உள்​ளிட்ட மையங்​களில் ஏராள​மானோர் ஆர்​வத்​தோடு தேர்வு எழு​தினர். இந்த தேர்​வுக்​கான உத்​தேச விடைகள் ஓரிரு நாளில் வெளி​யிடப்​படும். அதன்பிறகு தேர்வு முடிவு​கள் வெளி​யாகும் என்​று அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி