தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இந்த ஆண்டு, கல்வி உரிமைச் சட்டம் (RTE) மூலம் தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்களை, ஏற்கனவே பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்குவதாக நிபந்தனை விதித்தது.
Follow Us
/indian-express-tamil/media/media_files/2025/10/06/rte-admission-2025-26-2025-10-06-10-58-20.jpg)
கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009-இன் கீழ், தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்களை நிரப்பும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, நடப்புக் கல்வி ஆண்டில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு, ஏற்கனவே பள்ளியின் நுழைவு நிலை வகுப்புகளில் (LKG/வகுப்பு 1) சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே RTE இட ஒதுக்கீட்டை வழங்குவது என்று அரசு எடுத்த முடிவே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதிகாரபூர்வ தகவலின்படி, 3,220 தனியார் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 34,666 RTE இடங்களுக்கு, அக்டோபர் 14 ஆம் தேதி வரை வெறும்16,707 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.ஆனால் தனியார் தொடக்க பள்ளிகளின் 45,721 இடங்களுக்கு 65,306 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த கல்வி ஆண்டில் மொத்தமாக 1.7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
ஆர்.டி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பு வழக்கமாக ஏப்ரல் மாதம் வெளியாகும் நிலையில், மத்திய அரசின் 'சமக்ர சிக்ஷா' நிதி தாமதத்தால், இந்த ஆண்டு கல்வி ஆண்டு தொடங்கி 4 மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 6 அன்று மட்டுமே அறிவிப்பு வெளியானது. இந்த காலதாமதம் காரணமாக, பள்ளிக் கல்வித்துறை ஆர்.டி.இ. ஒதுக்கீட்டை, ஏற்கனவே பள்ளியில் கட்டணம் செலுத்திச் சேர்ந்த மாணவர்களுக்கும், தகுதி வரம்புக்குள் வருபவர்களுக்கும் மட்டுமே கட்டுப்படுத்தியது. இந்த மாணவர்கள் ஆர்.டி.இ. ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு திருப்பிச் செலுத்தும் (Fee Reimbursement) வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் குறைபாடு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆர்.டி.இ. சேர்க்கைக்கான காலக்கெடு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவு ஆர்.டி.இ. சட்டத்தின் உண்மையான நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று சமூக செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆர்.டி.இ. சட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வியை அணுகுவதற்கு வழிவகுக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்குவது, தகுதியான பல ஏழைக் குழந்தைகள் சேர்க்கை பெற வாய்ப்பில்லாமல் செய்துள்ளது என்று அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். எல்.கே.ஜி வகுப்புகளில் உள்ள 80,387 ஆர்.டி.இ இடங்கள் உட்பட அனைத்து இடங்களுக்கும், தகுதியுள்ள அனைவருக்கும் சேர்க்கையைத் திறக்க வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரியான நேரத்தில் அரசு அறிவிப்பு வெளியிடாததால், தனியார் பள்ளிகள் ஆர்.டி.இ. மாணவர்கள் இல்லாமல் இடங்களை நிரப்பிவிட்டன. இப்போது, ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குக் கட்டணத்தைத் திரும்பச் செலுத்தச் சொல்வது, சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுமா என்பது சந்தேகமே என்று தனியார் பள்ளி சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கவலை தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி