School Morning Prayer Activities - 28.10.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2025

School Morning Prayer Activities - 28.10.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2025

திருக்குறள் 

குறள் 460: 


நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் 

அல்லற் படுப்பதூஉ மில். 


விளக்க உரை: 


நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.


பழமொழி :

Every fall in life is a step to rise. 


வாழ்க்கையில் ஒவ்வொரு வீழ்ச்சியும் எழுவதற்கான படிகளே.


இரண்டொழுக்க பண்புகள் :


1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.


2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


அதிகம் வைத்திருப்பவன் செல்வந்தன் அல்ல; அதிகம் கொடுப்பவனே செல்வந்தன்


     –எரிச் ஃப்ரோம்


பொது அறிவு : 


1. 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?


கைலாஷ் சத்யார்த்தி மற்றும்

மலாலா யூசுப்சையி

Kailash Satyarthi and Malala Yousafzai


02.இந்தியாவில் அதிக மழை பெய்யும் மாநிலம் எது?


மேகாலயா -Meghalaya


English words :


vineyard – a piece of land where grapes are grown.திராட்சைத் தோட்டம்


தமிழ் இலக்கணம்: 


 தெரிநிலை வினை என்பது ஒரு செயலின் தொழிலையும், அது நடந்த காலத்தையும் தெளிவாகக் காட்டும் வினைச்சொல் ஆகும்.


எடுத்துக்காட்டு: "கயல்விழி மாலை தொடுத்தாள்".


செய்பவன்: கயல்விழி

கருவி: நார், பூ, கை

நிலம்: அவள் இருக்கும் இடம்

செயல்: தொடுத்தல்

காலம்: இறந்த காலம்

செய்பொருள்: மாலை


அறிவியல் களஞ்சியம் :


 முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.


மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.


அக்டோபர் 28


பில் கேட்ஸ் அவர்களின் பிறந்தநாள்


வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.


நீதிக்கதை


 ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தார்கள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது. 


ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது. 


அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கணும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தார்கள். 


அங்கிருந்த விளக்கு தண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றார்கள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான். 


விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள். 


மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டார்கள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒண்ணும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான். 


மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 


நீதி :


காலம் அறிந்து  அதற்கேற்ப புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள் - 28.10.2025


⭐சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.17½ லட்சம்- போலீசிடம் ஒப்படைத்த பிளஸ்-2 மாணவிக்கு குவியும் பாராட்டு


⭐மாணவர்கள் பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும்... அதுவே என் ஆசை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.


⭐மோன்தா புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 பிரித்தானிய கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் 10,000 ரன்கள் கடந்து புதிய சாதனை: பிரித்தானிய கிரிக்கெட் வீரர் ஜோ ரூட், இந்த வாரம் 10,000 ரன்கள் சாதனையை எட்டியுள்ளார். 


Today's Headlines


⭐Plus-2 student who handed over Rs. 17½ lakhs to the police after finding it lying unclaimed on the road is receiving praise.


⭐ Students should create many new institutions... That is my wish, CM M.K. Stalin advised.


⭐Cyclone Montha: Cyclone warning pole number 2 raised at Tamil Nadu ports


 SPORTS NEWS 


 🏀 British cricketer Joe Root crosses 10,000 runs, sets new record: British cricketer Joe Root has reached the record of 10,000 runs this week.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி