நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களை நிர்பந்திக்கவில்லை: விமர்சனத்துக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2025

நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களை நிர்பந்திக்கவில்லை: விமர்சனத்துக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

 

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித்திட்​டத்​தில் நன்​கொடை வசூலிக்க ஆசிரியர்​கள், அலு வலர்​கள் நிர்​பந்​திக்​கப்​படு​வ​தாக எழுந்​துள்ள குற்​றச்​சாட்​டு​களை மறுத்து பள்​ளிக்​கல்​வித் துறை விளக்​கம் அளித்​துள்​ளது.


தமிழகத்​தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்​டத்​தின் வாயி​லாக நன்​கொடைகளை வசூலிக்க பள்​ளிக் கல்​வித்​துறை அதி​காரி​களும் ஆசிரியர்​களும் வற்​புறுத்​தப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. அதற்கு மறுப்பு தெரி​வித்து பள்​ளிக்​கல்​வித் துறை அளித்​த விளக்​கம்: நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்​டம், நிறு​வனங்கள் சட்​டம் பிரிவு 8-ன்​கீழ் தமிழக அரசால் பதிவு செய்​யப்​பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்​களின் கல்வி வளர்ச்​சி​யில் அக்​கறை கொண்ட பங்​களிக்க விரும்​பும் தொழில் நிறு​வனங்​கள், தன்​னார்​வத் தொண்டு நிறு​வனங்​கள், முன்​னாள் மாணவர்​கள் மற்​றும் தனி​நபர்​கள் ஆகியோரின் மீதே இத்​திட்​டத்​தின் முழு கவன​மும் பதிந்​துள்​ளது. முக்​கிய​மாக எந்த ஒரு அரசு அலு​வலரோ, ஆசிரியரோ எந்த நிதி​யை​யும் பெற நியமிக்​கப்​பட​வில்​லை. இந்த தளத்​தில் பெறப்​படும் பங்​களிப்​பு​கள் வெளிப்​படைத்​தன்மை கொண்​ட​தாகும்.


இந்த திட்​டத்​தின் மூலம் இது​வரை 885 நிறு​வனங்​கள் மற்​றும் 1,500-க்​கும் மேற்​பட்ட தனி​நபர்​கள் சுமார் ரூ.860 கோடியை வழங்​கி​யுள்​ளனர். 200-க்​கும் மேற்​பட்ட நன்​கொடை​யாளர்​கள் ஆண்​டு​தோறும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரு​வது இதன் நம்​பகத்​தன்மை மீதான சான்​றாகும். அதே​போல், பள்ளிக்கல்​வித் துறைக்​கான அரசு நிதி ஒதுக்​கீடு கடந்த 4 ஆண்​டு​களில் 43.5% உயர்ந்​துள்​ளது. 2025–26-ல் ரூ.46,767 கோடி​யாக உள்​ளது.


இத்​திட்​டம் அரசின் நிதி ஒதுக்​கீட்​டுக்கு மாற்று அல்ல. மாறாக சமூகங்​களை​யும் நிறு​வனங்​களை​யும் முன்​னாள் மாணவர்களை​யும் பள்​ளியு​டன் இணைக்​கும் பால​மாகும். எனவே ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை ஒதுக்கி,உறுதியான தகவல்களைமட்டுமே பொது​மக்​கள் நம்புமாறு கேட்​டுக் கொள்​கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி