‘டெட்’ தேர்வு விவகாரத்தில் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்க சட்டங்களில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2025

‘டெட்’ தேர்வு விவகாரத்தில் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்க சட்டங்களில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

 

டெட் தேர்வு தொடர்​பாக கல்வி உரிமைச் சட்​டம், தேசிய ஆசிரியர் கல்விக்​குழும சட்​டங்​களில் உரிய திருத்​தங்​கள் செய்து ஆசிரியர்​களை பாது​காக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்​டா​லின் கடிதம் எழு​தி​யுள்ளார்.


இதுகுறித்​து, அவர் நேற்று எழு​திய கடிதம்: ஆசிரியர் தகு​தித்தேர்​வில் தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்​களும், அப்​பணி​யில் தொடர 2 ஆண்​டு​களுக்​குள் டெட் தகு​தி​யைப் பெற வேண்​டும் என்​றும் தகுதி பெறா​விட்​டால் பதவி உயர்​வுக்​குத் தகு​தி​யற்​றவர்​களாக இருப்​பார்​கள் என்​றும் உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பளித்துள்​ளது.


தேசிய ஆசிரியர் கல்விக் குழு​ம​மானது கடந்த 2010 ஆக.23-க்கு முன் நியமிக்​கப்​பட்ட ஆசிரியர்​களுக்​கு, தகு​தித் தேர்வுகளில் இருந்து தொடக்​கத்​தில் விலக்கு அளித்​திருந்​தது. இருப்​பினும், கல்வி உரிமைச் சட்​டத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தால் வழங்​கப்​பட் டுள்ள தற்​போதைய தீர்ப்​பு, ஆசிரியர்​களுக்கு முன்பு வழங்​கப்​பட்ட விலக்​கினை மீறி, டெட் கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.


இதனால் ஆசிரியர்​கள் இப்​போது 2 ஆண்​டு​களுக்​குள் டெட் தேர்ச்சி பெறா​விட்​டால் அவர்களின் வேலை பறிக்​கப்​படும் என்ற நிலை பெருத்த நிர்வாக சிரமத்​தை​யும், ஆசிரியர்​களுக்கு தனிப்​பட்ட சிரமத்​தை​யும் ஏற்​படுத்​தும். பணி நிபந்​தனைகளில் இத்​தகைய மாற்​றம் ஆசிரியர்​களின் உரிமை​களை மீறு​வதாக உள்​ளது. இது ஆசிரியர்​களின் நியமனத்​தின்​போது, நடை​முறையில் இருந்த சட்​டப்​பூர்வ விதி​களின்​ கீழ் முழு​மை​யாக தகுதி பெற்​று, முறை​யாக நியமிக்​கப்​பட்ட ஆசிரியர்​களில் பெரும்பான்மையோரை நேரடி​யாக பாதிக்கிறது.


அந்த வகை​யில், தமிழகத்​தில் மட்​டும் ஏறத்​தாழ 4 லட்​சம் ஆசிரியர்​கள் பாதிக்​கப்​படு​கின்​றனர். அவர்​கள் சட்​டப்​படி​யான மற்​றும் முறை​யான செயல்​முறைகள் மூலம் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​கள். அதோடு 2011-ல் டெட் அறிமுகப்​படுத்​தப்​படு​வதற்கு பல ஆண்​டு​களுக்கு முன் பணி​யில் சேர்ந்​தவர்​கள். அவர்​களுக்கு டெட் தேர்வை முந்​தைய தேதி​யிட்டு அமல்​படுத்​து​வது என்​பது, பணி உரிமை​களில் குறிப்​பிடத்​தக்க இடையூறை உரு​வாக்​கு​கிறது. இது மாநிலத்​தில் நிர்வாக ரீ​தியாக சாத்​தி​யமற்ற ஒரு நிலையை உரு​வாக்​கு​கிறது.


பள்​ளிக் கல்வி அமைப்​பின் செயல்​பாட்​டைச் சீர்​குலைக்​கும் வகை​யில் கடுமை​யான அபா​யத்தை ஏற்​படுத்​துகிறது.


ஆட்​சேர்ப்பு சுழற்​சிகள், தகு​தியான ஆசிரியர்​கள் கிடைக்​கும் தன்மை மற்​றும் கிராமப்​புற மற்​றும் தொலை​தூரப் பகு​தி​களில் பணி நிலைமை ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், எந்த மாநிலத்​தி​லும் இவ்​வளவு பெரிய எண்​ணிக்​கையி​லான ஆசிரியர்​களை மாற்​று​வது சாத்​தி​யமற்​றது மேலும், நீண்டகால​மாக பணி புரிந்து வரும் அனுபவம் பெற்ற ஆசிரியர்​களுக்கு பதவி உயர்​வுக்​கான வாய்ப்​பு​களை மறுப்​பதும் பெரிய அளவி​லான சிரமத்​தை​யும், தேக்க நிலை​யையும் ஏற்​படுத்​தும்.


ஆர்​டிஇ சட்​டப் பிரிவு 23-ல் தெரிவிக்​கப்​பட்​டுள்ள குறிப்​புரைகள் காரண​மாக, நாடு முழு​வதும் லட்​சக்​கணக்​கான ஆசிரியர்​கள் இவ்​வாறு பாதிக்​கப்​படு​வார்​கள். இவற்றை கருத்​தில் கொண்டு இலவச மற்​றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்​டம், மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமச் சட்​டம் ஆகிய​வற்​றில் உரிய திருத்​தங்​களை மேற்கொள்​ளத் தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க மத்​திய கல்வி அமைச்​சகத்​துக்கு அறி​வுறுத்​த வேண்​டும்​. இவ்​வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி