சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திருப்பித் தராத, உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சேர்க்கையை ரத்து செய்து விட்ட மாணவர்களுக்கு உரிய விதிகளின்படி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பித் தர வேண்டும். இதற்காக யுஜிசியால் 2018-ல் வெளியிடப்பட்ட கொள்கை, கடந்த கல்வியாண்டுடன் காலாவதியாகிவிட்டது.
இதையடுத்து புதிய கொள்கை வகுக்கும் வரை நடப்பு கல்வியாண்டிலும் அதே கொள்கையை கல்வி நிறுவனங்கள் தொடர வேண்டும். அதன்படி, கல்லூரி சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களின் கல்விக் கட்டணம், சான்றிதழ்களை கல்லுாரி நிர்வாகங்கள் உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி