தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் வருகிற நவ. 23, 24 தேதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பொருட்டு பள்ளி பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி புதிய பாடத்திட்டத்தை உருவாக்க மாநில திட்டக்குழு இயக்குநர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வருகிற நவ. 23, 24 ஆம் தேதிகளில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பொருட்டு பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்போது நவீன புதிய துறைகள் பற்றிய பாடத்திட்டங்களும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி