பாலிடெக்னிக் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2025

பாலிடெக்னிக் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம்

பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ திட்ட தொழில்​நுட்ப படிப்புகள் சேர்க்​கப்பட உள்​ளன. இதற்​காக ஆசிரியர்​களுக்கு அளிக்​கப்​படும் 6 நாள் திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி நேற்று தொடங்​கியது.


தமிழகத்​தில் நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 4-வது செமஸ்​டரில் நான் முதல்​வன் திட்ட தொழில்​நுட்ப படிப்​பு​கள் அறி​முகப்​படுத்​தப்பட உள்ளன.


இதைத்​தொடர்ந்​து, அத்​தொழில் ​நுட்ப பாடங்​களை நடத்த இருக்​கும் ஆசிரியர்​களுக்கு திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி அளிக்க தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் முடிவுசெய்​தது.


இதற்கு தேர்வு செய்​யப்​பட்ட ஆசிரியர்​களை டிசம்​பர் 15 முதல் 20 வரை பயிற்​சிக்கு அனுப்பி வைக்​கு​மாறு தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்​கும் அறி​வுறுத்​தி​யிருந்​தார்.


இந்​நிலை​யில், பாலிடெக்னிக் ஆசிரியர்​களுக்​கான 6 நாள் திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி தமிழகம் முழு​வதும் நேற்று தொடங்​கியது.


மொத்​தம் 10 மண்​டலங்​களாகப் பிரித்து சென்​னை, திரு​வண்​ணா​மலை, கடலூர், திருச்​சி, நாகப்​பட்​டினம், நாமக்​கல், கோவை, சிவகங்​கை, மதுரை, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, வேலூர், விழுப்​புரம், வலங்​கை​மான் ஆகிய இடங்​களில் உள்ள அரசு மற்​றும் தனி​யார் பாலிடெக்னிக் கல்​லூரி​களில் இப்​ப​யிற்சி நடை​பெறுகிறது. இப்​ப​யிற்​சியை வெற்​றிர​மாக முடிக்​கும் ஆசிரியர்​களுக்கு தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின்​ சான்​றிதழ்​ வழங்​கப்​படும்​.

1 comment:

  1. Already polytechnic is changed completely to a labour coolie training

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி