திருக்குறள்
குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்க உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
பழமொழி :
Success bows to the hardwork.
கடின உழைப்புக்கு வெற்றி தலைவணங்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.
2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.
பொன்மொழி :
நீ மதிக்கும் மனிதனை காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் தெரிந்து கொள்வேன் - தாமஸ் கார்லைல்
பொது அறிவு :
01."குழந்தை கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
அழ. வள்ளியப்பா
02.பாலை பதப்படுத்தும் முறையை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
லூயிஸ் பாஸ்டர்
Louis Pasteur
English words :
torched - burned
breach - breaking a rule
தமிழ் இலக்கணம்:
முக்காற்புள்ளி (:) பயன்படுத்தப்படும் இடங்கள் 2:
விளக்கங்களைத் தொடங்குதல்: ஒரு தலைப்பு அல்லது பொதுவான கூற்றுக்குப் பிறகு விளக்கம் வரும்போது.
எ.கா.: நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை.
அறிவியல் களஞ்சியம் :
வால் நட்சத்திரத்துக்கு வால் உள்ளது. சூரியனுக்கு அருகிலுள்ள புதன் கோளுக்கு வால் உள்ளது. 'கதிர்வீச்சு அழுத்தம்' காரணமாக சோடியம் அணுக்கள் வெளியே தள்ளப்பட்டு அதன் வளிமண்டலத்தை அகற்றி, அதற்கு நீண்ட ஒளிரும் வால் கிடைக்கிறது. அதுபோல பூமிக்கு வால் இருக்கிறதா என்றால் ஆம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால், விண்வெளியில் 20 லட்சம் கி.மீ., துாரத்துக்கு நீண்டுள்ளது. இது பூமியின் இருண்ட பக்கத்தில் இருப்பதால் இது தெரிவதில்லை. பூமியின் காந்தப்புலத்தை சூரிய காற்று சிதைப்பதால் இந்த வால் உருவாகிறது.
டிசம்பர் 19
கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நினைவுநாள்
கி. ஆ. பெ. விசுவநாதம் (10 நவம்பர் 1899 - 19 திசம்பர் 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, என அழைக்கப்படுபவர், தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. 1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது
நீதிக்கதை
மன உறுதி
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார்.
ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.
அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும், சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன்.
ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது, என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டுபயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.
இன்றைய செய்திகள் - 19.12.2025
⭐தமிழகத்தில் 1,439 பகுதிகளில் சட்டவிரோதக் கனிமத் திருட்டு கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கனிமவளக் கொள்ளை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
⭐பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
⭐இந்திய அணுசக்தித் துறையில் 100% தனியார் முதலீட்டை அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 'ஷாந்தி மசோதா' மக்களவையில் நிறைவேறியுள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி: அரியானாவுக்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜார்க்கண்ட்
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Today's Headlines
⭐Illegal mineral theft has been detected, and cases have been registered in 1,439 areas in Tamil Nadu. The Madras High Court has ordered strict action against the mineral theft.
⭐ India is now the 4th largest economy, surpassing Japan.
⭐The Shanthi Bill, which allows 100% private investment in India's nuclear energy sector, has been passed in the Lok Sabha
SPORTS NEWS
🏀Syed Mushtaq Ali Trophy Final: Jharkhand set a target of 263 runs for Haryana. The final of the Syed Mushtaq Ali Trophy is being held in Pune.
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி