ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் எஸ்.ஜெயந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிச. 27-ம் தேதி (காலை மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது. இதற்காக 38 மாவட்டங்களிலும் 195 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹால்டிக்கெட் வெளியீடு: தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யும்போது ஏதேனும் இடர்பாடு அல்லது சந்தேகம் எழுந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைதீர்ப்பு மையத்தை தொடர்புகொள்ளலாம். தேர்வு மையம் மாற்றம் தொடர்பான கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி