முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்க பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2026

முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்க பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

 

முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்​கம் பயிற்​சிகள் நீட்​டிக்கப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்வி இயக்​குநரகம் மற்​றும் தொடக்​கக்கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்​வி​யாண்டு (2025-26) பள்​ளிக்​கல்​வித் துறை மானியக் கோரிக்கை அறி​விப்​பின்​படி, அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்​புவரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடத்​திறன் மற்​றும் கணிதத்​திறன் ஆகிய​வற்றை மேம்​படுத்​தும் வகை​யில் திறன் இயக்​கப் பயிற்சி கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து பள்​ளி​களி​லும் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டது.

ஆசிரியர்​களின் தொடர் முயற்​சி​யால் தேர்​வில் 68 சதவீத மாணவர்​கள் அடிப்​படை கற்​றல் விளைவு​களில் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இன்​னும் தேர்ச்சி பெறாத மாணவர்​களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க கூடு​தல் கால அவ​காசம் தேவைப்​படு​வ​தால் முழு ஆண்​டுத் தேர்வு வரை திறன்பயிற்சி நீட்​டிக்​கப்​படு​கிறது. இதற்​கான வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி அனைத்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாணவர்​களும் திறன் மாதாந்​திர மதிப்​பீட்​டில் பங்​குபெற வேண்​டும். முழு ஆண்​டுத் தேர்​வின்​போது தமிழ், ஆங்​கிலம்,கணித பாடங்​களுக்கு திறன் பயிற்சி புத்​தகம் சார்ந்த தனி வினாத்​தாள்​ வழங்​கப்படும். அதே​போல், அறி​வியல் மற்​றும் சமூக அறி​வியல் பாடத் தேர்​வு​களுக்​கான கேள்வி​கள், முந்தைய வகுப்​பு​களில் இருந்து எளிமை​யான​தாக இருக்​கும்.

மேலும், திறன் பயிற்சி பெற்ற 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்​களுக்கு வகுப்பு நிலை பாடங்​களுக்​குத் தயா​ராகும் வகை​யில்,அடுத்த கல்​வி​யாண்​டின் முதல் மாதம் பிரிட்ஜ் கோர்​ஸ் நடத்​தப்படும். இதைப் பின்​பற்றி அனைத்து பள்ளி தலை​மை​யாசிரியர்​களும் செயல்பட வேண்​டும்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி