TNTET - தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு: விரைவில் அரசாணை வெளியாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2026

TNTET - தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு: விரைவில் அரசாணை வெளியாகிறது


ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, ஒடிசா உள்​ளிட்ட மாநிலங்​களைப் பின்​பற்றி தமிழகத்​தி​லும் ஆசிரியர் தகு​தித் தேர்​வுக்​கான (டெட்) தேர்ச்சி மதிப்​பெண் 5 சதவீதம் குறைக்​கப்​படு​கிறது. இதற்​கான அரசாணை விரை​வில் வெளி​யாக உள்​ளது.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​கள் டெட் தேர்​வில் கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். தமிழகத்​தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்துகிறது.


மொத்​தம் 150 மதிப்​பெண்​கள் கொண்ட டெட் தேர்​வில் தேர்ச்சி பெற பொதுப்​பிரி​வினர் 60 சதவீத மதிப்​பெண்​ணும் பிசி, பிசி-​முஸ்​லிம், எம்​பிசி, எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 55 சதவீதமும் எடுக்க வேண்​டும்.

கடந்த நவம்​பரில் நடத்​தப்​பட்ட டெட் தேர்​வில் மட்​டும் எஸ்சி வகுப்​பினருக்குதேர்ச்சி மதிப்பெண் 40 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இந்தத் தேர்வு முடிவு​கள் இன்னும் வெளி​யா​வில்​லை. இதற்கிடையே, அண்மை​யில் அமைச்​சர் அன்​பில் மகேஸிடம், இதர மாநிலங்​களைப்போல் தமிழகத்​திலும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரின.


ஆந்​தி​ரா, தெலங்​கானாவில் டெட் தேர்ச்சி மதிப்​பெண் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்கு 50 சதவீத​மாக​வும் எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 40 சதவீத​மாக​வும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. பிஹாரில் ஓபிசி-க்கு 50 சதவீத​மாக​வும் எஸ்​சி, எஸ்டி-க்கு 45 சதவீத ​மாக​வும் உள்​ளது.

உத்​தரப்​பிரதேசத்​தில் ஓபிசி-க்கு 55 சதவீத​மாக​வும் எஸ்​சி, எஸ்டி-க்கு 45 சதவீத​மாக​வும் இருக்கிறது. ஹரி​யானா மற்​றும் ஒடி​சா​விலும் அனைத்து பிரி​வினருக்​கும் தேர்ச்சி மதிப்​பெண் 50 சதவீத​மாக உள்​ளது.


இந்​நிலை​யில், மற்ற மாநிலங்​களைப் போல் தமிழகத்​தி​லும் மதிப்​பெண்ணை குறைக்க அரசு முன்​வந்​துள்​ளது. அதன்​படி, ஆந்​தி​ரா​வில் இருப்​ப​தைப்​போன்று பிசி, எம்​பிசி வகுப்​பினருக்கு 50 சதவீத​மாக​வும் (150-க்கு 75 மதிப்​பெண்) எஸ்​சி, எஸ்டி வகுப்​பினருக்கு 40 சதவீத​மாக​வும் (150-க்கு 60) என குறைக்​கப்​படு​கிறது. இதற்​கான அரசாணை விரை​வில் வெளி​யிடப்பட உள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்​கான 5 சதவீத மதிப்​பெண் குறைப்பை கடந்த 2025 டெட் தேர்​வில் இருந்தே அமல்​படுத்த அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் காரண​மாக, தேர்ச்சி பெறும் ஆசிரியர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரிக்​கும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி​யிட்​டுள்ள புள்ளி விவரப்​படி, டெட் தாள்​1-ல்தேர்ச்சி பெற்று 68,756 இடைநிலை ஆசிரியர்​களும், தாள்​ 2-ல் தேர்ச்சி பெற்று 66,660 பட்​ட​தாரி ஆசிரியர்​களும் பணியை எதிர்​பார்த்து காத்​திருக்​கின்​றனர்.

அரசு பள்​ளி​களில் இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர் நியமனத்தை பொருத்​தவரை​யில் டெட் தேர்ச்சி பெற்​றாலும் அவர்​கள் பணிநியமனத்​துக்கு மற்​றொரு போட்​டித் தேர்வை எழுத வேண்​டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி