தேர்வுகள் எதுவுமின்றி இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2026

தேர்வுகள் எதுவுமின்றி இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 28,740 பணியிடங்களை தேர்வுகள் எதுவுமின்றி நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் எதுவுமின்றி தேர்வு செய்யப்படும் மத்திய அரசு வேலைக்கான சிறந்த வாய்ப்பை தகுதியானவர்கள் பயன்படுத்தி பலன் பெறலாம்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலிப் பணியிடங்கள் : 28,740

பணி: BRANCH POSTMASTER (BPM)

சம்பளம்: மாதம் ரூ. 12,000 - ரூ.29,380

பணி: ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)

பணி: DAK SEVAK

சம்பளம்: மாதம் ரூ. 10,000 - ரூ.24,470

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியிடன் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக, கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in அல்லது https://indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.2.2026

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி