தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
இதில் பிளஸ் 2 தேர்வை பள்ளி மாணவர்கள் 7,99,692, தனித் தேர்வர்கள் 27,783 என 8,27,475 பேர் எழுதவுள்ளனர். அதேபோல், பிளஸ் 1 அரியர் தேர்வை பள்ளி மாணவர்கள் 19,107 மற்றும் தனித் தேர்வர்கள் 5,944 என 25,051 பேர் வரை எழுதுகின்றனர்.
இந்நிலையில், பிளஸ் 2, பிளஸ் 1 அரியர் பாடத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று மதியம் வெளியானது.
இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறையின் http://dgeapp.tnschools.gov.in/ எனும் வலைத் தளத்தில் சென்று மாணவர்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
அதில் மாணவர்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து பின்னர் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.
ஒரே ஹால்டிக்கெட்: அதே நேரம், தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
ஹால்டிக்கெட்டில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி